கடந்த 08ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது பணிகளில் ஈடுபட்ட பணியாட் தொகுதியினருக்கு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இதற்கான சுற்றுநிருபம் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவினால் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணையாளர் அல்லது மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரின் அறிவுறுத்தல்களுக்கமைய தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட பணியாட் குழுவினருக்கு கொடுப்பனவு செய்வதற்கேற்றவகையில் 2015/01 இலக்க 2015.01.12 ஆம் திகதிய சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணிக்குரிய கட்டணத் தொகைகளும், அவை வழங்கப்படவேண்டிய முறை பற்றியும் சுற்றுநிருபத்தில் விபரிக்கப்பட்டுள்ளது.
வாக்கெடுப்பு நிலையமொன்றில் வாக்கெடுப்பு கடமையில் ஈடுபட்ட அலுவலர்கள் பின்வரும் ஒழுங்கில் கொடுப்பனவைப் பெற்றுக் கொள்வர், சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்- 3250 ரூபா, மேலதிக சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர் 2500 ரூபா, விஷேட கனிஷ்ட தலைமை தாங்கும் அலுவலர் 2000 ரூபா, கனிஷ்ட தலைமை தாங்கும் அலுவலர் மற்றும் எழுதுனர் 1900 ரூபா, கனிஷ்ட ஊழியர் 1350 ரூபா.
தேர்தல் தினத்திற்கு முந்திய தினம் சிரேஷ்ட தலைமைதாங்கும் அலுவலர்களுக்கு வாக்குப்பெட்டி மற்றும் வாக்குச் சீட்டு வினியோகம் மற்றும் கையேற்றல் பணிகளில் ஈடுபட்ட அலுவலர்களுக்கு, உதவித் தெரிவத்தாட்சி அலுவலர் 900 ரூபா, சிரேஷ்ட, கனிஷ்ட தலைமைதாங்கும் அலுவலர் மற்றும் எழுதுனர் 700 ரூபா, அலுவலக உதவியாளர் 600 ரூபா.
வாக்கெண்ணல் கடமையில் ஈடுபட்ட அலுவலர்களுக்கு, உதவித் தெரிவத்தாட்சி அலுவலர் 3500 ரூபா, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர் 2300 ரூபா, கனிஷ்ட தலைமை தாங்கும் அலுவலர் மற்றும் எழுதுனர் 2000 ரூபா, அலுவலக உதவியாளர் 1250 ரூபா.
முடிவுகளை வெளியிடுதல், அட்டவணைப்படுத்துதல் பணிகளில் ஈடுபட்ட அலுவலர்கள், தலைமை வாக்கெண்ணும் அலுவலர் 6250 ரூபா, பிரதி தலைமை வாக்கெண்ணும் அலுவலர் 4250 ரூபா, உதவித் தெரிவத்தாட்சி அலுவலர் 3500 ரூபா, சிரேஷ்ட தலைமைதாங்கும் அலுவலர் 2300 ரூபா, கனிஷ்ட தலைமைதாங்கும் அலுவலர் மற்றும் எழுதுனர் 2000 ரூபா, அலுவலக உதவியாளர் 1250 ரூபா.
கொடுப்பனவுக்கு நியமனக் கடிதம் மற்றும் தேர்தல் ஆணையாளரினால் அங்கீகரிக்கப்பட்ட அச்சடித்த வரவுச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். கொடுப்பனவுகள் யாவும் மார்ச் 25ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் வழங்கிமுடிக்கப்படல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.