முகப்பு

  • செய்திகள்

Wednesday, January 14, 2015

தோ்தல் பணிகளில் ஈடுபட்ட அரச ஊழியா்களுக்கான கொடுப்பனவு விபரங்கள்


கடந்த 08ஆம் திகதி நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்தலின் போது பணி­களில் ஈடு­பட்ட பணியாட் தொகு­தி­யி­­ருக்கு கொடுப்­பனவு                              வழங்­கப்­­­வுள்­ளது. இதற்­கான சுற்­று­நி­ருபம் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்­பி­ரி­­வினால் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணை­யாளர் அல்­லது மாவட்ட தெரிவத்­தாட்சி அலுவ­லரின் அறி­வு­றுத்­தல்­­ளுக்­­மைய தேர்தல் கட­மை­களில் ஈடுபட்ட பணியாட் குழு­வி­­ருக்கு கொடுப்­­னவு செய்வதற்கேற்ற­­கையில் 2015/01 இலக்க 2015.01.12 ஆம் திகதிய சுற்று நிருபம் வெளியி­டப்­பட்­டுள்­ளது. ஒவ்­வொரு பணிக்கு­ரிய கட்­டணத் தொகை­களும், அவை வழங்கப்படவேண்டிய முறை பற்­றியும் சுற்­று­நி­ரு­பத்தில் விபரிக்கப்­பட்­டுள்­ளது.
வாக்­கெ­டுப்பு நிலை­­மொன்றில் வாக்­கெ­டுப்பு கட­மையில் ஈடுபட்ட   அலு­­லர்கள் பின்­வரும் ஒழுங்கில் கொடுப்­­னவைப் பெற்றுக் கொள்வர், சிரேஷ்ட தலைமை தாங்கும் அலு­வலர்- 3250 ரூபா, மேல­திக சிரேஷ்ட தலைமை தாங்கும் அலு­வலர் 2500 ரூபா, விஷேட கனிஷ்ட தலைமை தாங்கும் அலு­வலர் 2000 ரூபா, கனிஷ்ட தலைமை தாங்கும் அலு­வலர் மற்றும் எழு­துனர் 1900 ரூபா, கனிஷ்ட ஊழியர் 1350 ரூபா.

தேர்தல் தினத்­திற்கு முந்­திய தினம் சிரேஷ்ட தலை­மை­தாங்கும்              அலு­­லர்­­ளுக்கு வாக்குப்­பெட்டி மற்றும் வாக்குச் சீட்டு வினியோகம் மற்றும் கையேற்றல் பணி­களில் ஈடு­பட்ட அலுவலர்க­ளுக்கு, உத­வித் தெரிவத்­தாட்சி அலு­வலர் 900 ரூபா, சிரேஷ்ட, கனிஷ்ட தலை­மை­தாங்கும் அலு­வலர் மற்றும்  எழு­துனர் 700 ரூபா, அலு­­லக உத­வி­யாளர் 600 ரூபா.

வாக்­கெண்ணல் கட­மையில் ஈடு­பட்ட அலு­­லர்­­ளுக்கு, உதவித் தெரிவத்­தாட்சி அலு­வலர் 3500 ரூபா, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலு­வலர் 2300 ரூபா, கனிஷ்ட தலைமை தாங்கும் அலு­வலர் மற்றும் எழு­துனர்             2000 ரூபா, அலு­­லக உத­வி­யாளர் 1250 ரூபா.

முடி­வு­களை வெளியி­டுதல், அட்­­­ணைப்­­டுத்­துதல் பணி­களில் ஈடு­பட்ட அலு­­லர்கள், தலைமை வாக்­கெண்ணும் அலு­வலர் 6250 ரூபா, பிரதி தலைமை வாக்­கெண்ணும் அலு­வலர் 4250 ரூபா, உதவித் தெரிவத்­தாட்சி அலு­வலர் 3500 ரூபா, சிரேஷ்ட           தலை­மை­தாங்கும் அலு­வலர் 2300 ரூபா, கனிஷ்ட   தலை­மை­தாங்கும் அலு­வலர் மற்றும் எழு­துனர் 2000 ரூபா,     அலு­­லக உத­வி­யாளர் 1250 ரூபா.

கொடுப்­­­வுக்கு நிய­மனக் கடிதம் மற்றும் தேர்தல்     ஆணை­யா­­ரினால் அங்கீகரிக்கப்பட்ட அச்சடித்த வரவுச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். கொடுப்பனவுகள் யாவும் மார்ச் 25ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் வழங்கிமுடிக்கப்படல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment