கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் தரம் 1மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று (19) நடைபெற்றது.
பகுதித்
தலைவர்களான ஏ,எச்.ஏ, சமட் மற்றும் என்.ஏ, மஜீட் ஆசிரியர்களின் முன்னிலையில் அதிபர் எம்.
ஐ. றஸாக் தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்வி பணியகத்தின் திட்ட
இணைப்பாளர் ஏ, றாஸீக் மற்றும் கௌரவ அதிதியாக உதவி அதிபர் யூ. ஆதம்பாவா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
பாடசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள், தரம் 1 மாணவர்களின் பெற்றார்கள் மற்றும் ஆசிரியர்கள்உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
No comments:
Post a Comment