முகப்பு

  • செய்திகள்

Monday, December 9, 2013

தேசிய துக்க தினம் பிரகடனம்



மறைந்த தென்னாபிரிகாவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்  10 ஆம் திகதியும் 11 ஆம் திகதியும் தேசிய துக்க தினங்களாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.இந்த இரண்டு தினங்களிலும் தேசிய கொடிகளை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறும் அறிவுறுத்தியுள்ளது

இதே வேளை தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் நினைவு நிகழ்வில் கலந்து கொள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று பிற்பகல் தென் ஆபிரிக்கா பயணமானார்.

இன்று இரவு தென் ஆபிரிக்கா சென்றடையும் ஜனாதிபதி நாளையும் நாளை மறுதினமும் இடம்பெறும் நினைவு நிகழ்வுகளில் கலந்து கொள்வார்

 
இந்த நிலையில் நாளை மறுதினம்  நெல்சன் மண்டேலாவின் புகழுடலுக்கு இறுதி மரியாதையை செலுத்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment