முகப்பு

  • செய்திகள்

Thursday, December 12, 2013

கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் கடின பந்து வலைப் பயிற்சி கூடம் - பெஸ்டர் றியாஸின் முயற்சி வெற்றி



கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளருமான .எம்.றியாஸ் (பெஸ்டர்) அவர்களின் அயராத முயற்சியினால் கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் கடின பந்து வலைப் பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு வருகின்றது.
                                                                                                          சிரேஷ்ட அமைச்சர் பி.தயாரத்னவிடம் கல்முனை மாநகர  சபை உறுப்பினர் பெஸ்டர் றியாஸ் விடுத்த வேண்டுகோளின் பேரில் தெயட்ட கிருள்ள திட்டத்தின் கீழ் மேற்படி பயிற்சி கூடத்திற்கு நான்கு லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இப்பயிற்சி கூட நிர்மாணப் பணிகளை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு கல்முனை மாநகர சபை உறுப்பினர் பெஸ்டர் றியாஸ் தலைமையில் இடம்பெற்றது இதில் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இதன் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.


கல்முனையில் உள்ள 26 விளையாட்டுக் கழகங்கள் நீண்ட காலமாக இங்கு கடின பந்து வலைப் பயிற்சி கூடம் ஒன்றை அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்து வந்ததைத் தொடர்ந்தே தான் இதனை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதாக மாநகர சபை உறுப்பினர் பெஸ்டர் றியாஸ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment