முகப்பு

  • செய்திகள்

Tuesday, February 4, 2014

சச்சினுக்கு பாரத ரத்னா விருது


சச்சின் டெண்டுல்கர் கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதியுடன் கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றார். அவரை கெளரவிக்கும் விதமாக இந்திய மத்திய அரசு அன்றைய தினமே, சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று அறிவித்தது.  
அதன்படி விருது வழங்கும் விழா இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் இன்று நடைபெற்ற விழாவில் சச்சினுக்கு பாரத ரத்னா விருதினை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். 


பாரத ரத்னா விருது பெற்ற சச்சின், நிருபர்களிடம் கூறுகையில், “நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவை பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்விருதை நான் பெற காரணமாக இருந்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், நாட்டு மக்களுக்கு பயன்படும் வகையில் ஏதாவது ஒரு வகையில் பணிபுரிவேன். இவ்விருதினை என் தாயாருக்கும், குழந்தைகளுக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்யும் அனைத்து தாய்மார்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment