முகப்பு

  • செய்திகள்

Wednesday, October 15, 2014

கல்முனை அல் பஹ்றியா ம.வி. ஆசிரியர் அணி, ஐந்து விக்கட்டுக்களால் வெற்றி



சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்முனை அல் பஹ்றியா ம.வி. ஆசிரியர் அணிக்கும்  கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லுரி ஆசிரியர் அணிக்குமிடையே இன்று(15) நடைபெற்ற பத்து ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிறிக்கெட் போட்டியில்  கல்முனை அல் பஹ்றியா ம.வி. ஆசிரியர் அணி ஐந்து விக்கட்டுக்கலால் வெற்றி பெற்றது.


இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லுரி ஆசிரியர் அணியினர் பத்து ஓவர்கள் முடிவில் 132 ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்கு ஆடிய கல்முனை அல் பஹ்றியா ம.வி. ஆசிரியர் அணி 8.3 ஓவர்களில் ஐந்து விக்கட்டுக்கள் இழப்புக்கு 134 ஓட்டங்களைப் பெற்று ஐந்து விக்கட்டுக்களால் வெற்றி பெற்றனர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக, ஆடடமிழக்காமல் 49 ஓட்டங்களைப் பெற்ற   கல்முனை அல் பஹ்றியா ம.வி. ஆசிரியர் அணியைச் சேர்ந்த சுதர்சன் ஆசிரியர் தெரிவானார்.


No comments:

Post a Comment