வடக்கு கிழக்கில் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முதலாவது பொது அமர்வு கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கரைச்சி பிரதேச செயலக பிரிவில் நாளை 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1990 முதல் 2009 ஆண்டு காலப்பகுதியில் காணாமல் போனோர் தொடர்பில் முறைப்பாடு செய்தவர்கள் சுதந்திரமாக வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சகல கிராமசேவையாளர் பிரிவுகளிலும் இவ்வாறான விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment