முகப்பு

  • செய்திகள்

Monday, January 12, 2015

பரிசுத்த பாப்பரசர் இலங்கை வந்தடைந்தார்

 பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை இன்று (!3) கொழும்பு   கட்டுநாயக விமான நிலையத்தை வந்தடைத்தார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வருகைதடைந்துள்ள பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ்  விமான நிலையத்தில் வைத்து வரவேற்கப்பட்டார்.

வருகை தந்த பாப்பரசரை வரவேற்கும் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் பல முக்கிய அரசியல் பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பாப்பரசரை வரவேற்றனர். 

அத்துடன் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் ஆயர்கள், அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் இந்த வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். 

No comments:

Post a Comment