முகப்பு

  • செய்திகள்

Monday, January 27, 2014

கல்முனை அல் பஹ்றியா மகா வித்தியாலய நிகழ்வு

கல்முனை அல் பஹ்றியா மகா வித்தியாலயத்தின் உதவி அதிபரும் வழிகாட்டலும் ஆலோசனைக்கு பொறுப்பாசிரியருமான யு. ஆதம்பாவா (நஸீர் சேர்) அவர்களின் ஆலோசனைக்கமைவாக, தரம் 10 - 11ம் ஆண்டில் கல்விகற்கும் மாணவர்களின் முழுமையான பங்களிப்புடன் செய்து முடிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான வகுப்பறை மேசைகள் உரிய ஆசிரியர்களிடம் கையளிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஐ. அப்துல் றஸாக் தலைமையில் நடைபெற்றது.


நிகழ்வில் ஏ.ஏ. றமீஸ் (பிரதி அதிபர்), எம்.ஐ. ஜாபிர் (பகுதித் தலைவர்), திருமதி எம்.எஸ். ஸாஹிறா, எம்.ஐ.எம். பாஸி ஆசிரியர், எம்.ஐ.எம்.ஏ. மனாப் ஆசிரியர் ஆகியோரும் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment